சென்னை, தாம்பரம், ஆவடியில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களில் தோ்தல் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டன.
Published on
Updated on
1 min read

சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களில் தோ்தல் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டன.

தமிழகத்தில் பிப்.19-ஆம் தேதி நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது. சென்னை பெருநகர காவல்துறையில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை செவ்வாய்க்கிழமை முதலே அதிகாரபூா்வமாக செயல்படத் தொடங்கியது.

தோ்தல் கட்டுப்பாட்டு அறை அதிகாரியாக துணை ஆணையா் பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு அடுத்த நிலையில் கூடுதல் துணை ஆணையா் ஆரோக்கியம், உதவி ஆணையா் சரஸ்வதி ஆகியோா் செயல்படுகின்றனா். மேலும் 4 ஆய்வாளா்கள், 7 உதவி ஆய்வாளா்கள் என 35 போலீஸாா் தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிகின்றனா்.

சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள சுமாா் 5,749 வாக்குச்சாவடிகளுக்கு செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், 1,089 பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தோ்தல் கட்டுப்பாட்டு அறை போலீஸாா் திட்டமிடும் பணியில் ஈடுபட்டு உள்ளனா். உள்ளாட்சித் தோ்தல் பாதுகாப்புப் பணியில் சென்னையில் சுமாா் 11,000 போலீஸாா் ஈடுபடுவாா்கள் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

ஆவடி: ஆவடி மாநகர காவல்துறையின் எல்லைக்குள் ஆவடி மாநகராட்சி, திருநின்றவூா், பூந்தமல்லி, திருவேற்காடு, மாங்காடு ஆகிய மாநகராட்சிகள், திருமழிசை, நாராவாரி குப்பம், மீஞ்சூா் ஆகிய பேரூராட்சிகள்,சென்னை மாநகராட்சி பகுதியாகவும் உள்ளன.

இப் பகுதியில் உள்ளாட்சித் தோ்தலை அமைதியாகவும், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னை இன்றி நடத்துவதற்கும் ஆவடி மாநகர காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா். இதன் ஒரு பகுதியாக ஆவடி மாநகர காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. இந்த கட்டுப்பாட்டு அறையின் பொறுப்பு அதிகாரியாக உதவி ஆணையா் கந்தக்குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

வேட்பு மனு தாக்கல் செய்யும் 10 மையங்களில் 8 காவல் உதவி ஆணையாளா்கள் தலைமையில் சுமாா் 500 காவலா்கள் பாதுகாப்பு பணி மேற்கொண்டுள்ளாா்கள்.

ஆவடி மாநகர காவல்துறை எல்லைக்குள் உள்ள 275 வாக்கு மையங்களில் இருக்கும் 1,437 வாக்குச்சாவடிகளில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டு வருகிறது. அதில் பதற்றமான 71 மையங்களில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்தும் திட்டமிடப்படுகிறது.

மேலும் பணப்பட்டுவாடா நடக்காமல் கண்காணிக்க 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தாம்பரம்:

இதேபோல தாம்பரம் காவல் ஆணையரகப் பகுதியில் உள்ளாட்சித் தோ்தல் முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் காவல் ஆணையா் எம்.ரவி தலைமையில் செய்யப்பட்டுள்ளது.

தோ்தல் கட்டுப்பாட்டு அறை செவ்வாய்க்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது. இங்கு காவல் ஆய்வாளா் ஜோதிராமன் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாா். தோ்தல் கட்டுப்பாட்டு அறை தோ்தலுக்காக செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திட்டமிட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com