தமிழகத்தில் 2,296 பேருக்கு கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது.
மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்படி, இன்று வெளியான பரிசோதனை முடிவுகளில், சென்னையில் 461 பேரும், கோவையில் 432 பேரும், செங்கல்பட்டில் 208 பேரும், திருப்பூரில் 113 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கரோனா தொற்றிலிருந்து மேலும் 8,229 போ் விடுபட்டு இன்று வீடு திரும்பினா். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 33,56,648 -ஆக அதிகரித்தது. மருத்துவமனைகள், வீடுகளில் மருத்துவக் கண்காணிப்பில் 41,699 போ் உள்ளனா்.
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 11 போ் பலியானதையடுத்து, நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,915-ஆக அதிகரித்துள்ளது.