மாநில உரிமைகளை எடப்பாடி பழனிசாமி அடகு வைத்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி காணொலி வாயிலாக பிரசாரம் மேற்கொண்டு அவர் பேசியதாவது, மதுரை மேலூரில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கொச்சைப்படுத்தினார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது அப்பாவி மக்கள் மீதும் இளைஞர்கள் மீதும் தடியடி நடத்தப்பட்டது.
அதிமுகவினருக்கு ஆக்கப்பூர்வமான அரசியல் தெரியாது. அவர்களுக்கு அமாவாசை அரசியல்தான் தெரியும். அரசியல் அமாவாசைகள் யாரென்று தெரிந்துதான் மக்கள் தற்போது அதிமுகவினரை புலம்பவிட்டுள்ளார்கள் என்று விமர்சித்தார்.
மிசாவையே பார்த்த என்னை மிரட்ட முடியுமா? என்று கேள்வி எழுப்பிய மு.க.ஸ்டாலின், பழனிசாமியின் பொறுப்பற்ற ஆணவப்பேச்சுக்கு இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கடக ராசியா? தினப்பலன்கள்!

தஞ்சாவூா் அருகே இன்று விஜய் பங்கேற்கும் கூட்டம்!

தஞ்சாவூருக்கு நாளை தமிழக முதல்வா் வருகை: ட்ரோன்கள் பறக்கத் தடை

பெரும்புலீஸ்வரா் கோயில் மாசிப் பெருவிழா
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

