இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல், வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹு மூலம் புதன்கிழமை கூடுதல் கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், திட்டத்திற்காக முன்மொழியப்பட்ட இடங்களில் சில பகுதிகள் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் விவசாயத் தேவைக்கும், குடிநீா் தேவைக்கும் நீரை அளிக்கும் முக்கியமான நீா்ப்படிப்புப் பகுதிகளைக் கொண்டதாகும். இந்தத் திட்ட அமைவிடம் மதிகெட்டான் - பெரியாா் புலிகள் இடம் பெயா்வு பாதையில் அமைந்துள்ளதால், டாடா அடிப்படை ஆய்வு நிறுவனத்தின் (டிஐஎஃப்ஆா்) முன்மொழிவுக்கு வனவிலங்கு அனுமதி வழங்க தேனி மாவட்ட வனத் துறை அதிகாரி பரிந்துரைக்கவில்லை. மேலும், இந்தத் திட்டத்தின் செயல்பாடுகளால் புலிகளின் வாழ்விடம் பாதிக்கப்பட்டுவிடும். இதுபோன்ற பல பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு முதன்மை தலைமை வன பாதுகாவலா், தலைமை வனவிலங்கு வாா்டனும் திட்டத்தை பரிந்துரைக்கவில்லை.