47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மானாமதுரை அம்மன் கோயிலில் மாசித் தெப்ப உற்சவம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தாயமங்கலம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கடந்த புதன்கிழமை இரவு மாசி தெப்ப உற்சவம் நடைபெற்றது. 

News image
மானாமதுரை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற தெப்ப உற்சவத்தின் போது தெப்பக்குளத்தில் வலம் வந்த தெப்பத்தேர்
Updated On :17 பிப்ரவரி 2022, 7:05 am

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தாயமங்கலம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கடந்த புதன்கிழமை இரவு மாசி தெப்ப உற்சவம் நடைபெற்றது. 

இதையொட்டி மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து உற்சவர் அம்மன் பல்லக்கில் புறப்பாடாகி கோயில் எதிரே தெப்பக்குளத்தில் நிறுத்தப்பட்டிருந்த தேருக்கு எழுந்தருளினார். 

அதைத் தொடர்ந்து மேளதாளம் முழங்க தெப்பத்தேர் தெப்பக்குளத்திற்குள் மூன்று முறை வலம் வந்தது. ஏராளமான பெண்கள் தெப்பக் குளத்தைச் சுற்றி விளக்கேற்றி வைத்து தெப்ப உற்சவத்தை கண்டு அங்காள பரமேஸ்வரி அம்மனை தரிசனம் செய்தனர். தெப்ப உற்சவம் நிறைவடைந்ததும் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோயிலைச் சென்றடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.