நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குன்றத்தூர், மாங்காடு நகராட்சிகளைக் கைப்பற்றிய திமுக

திமுக அதிக வார்டுகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளைக் கைப்பற்றியுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :22 பிப்ரவரி 2022, 10:07 am

DIN

ஸ்ரீபெரும்புதூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், திமுக அதிக வார்டுகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளைக் கைப்பற்றியுள்ளது. 

தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் குன்றத்தூர் மாதா பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டது.  இந்தநிலையில், குன்றத்தூர் நகராட்சியில் உள்ள மொத்தம் உள்ள 30 வார்டுகளில், திமுக 22 வார்டுகளிலும், அதிமுக  5 வார்டுகளிலும், காங்கிரஸ் 2 வார்டுகளிலும், சுயேட்சை ஒன்றிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் திமுக தனிப்பெரும்பான்மையுடன் குன்றத்தூர் நகராட்சியைக் கைப்பற்றியுள்ளது.

அதேபோல், மாங்காடு நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில் திமுக 14 வார்டுகளிலும், மதிமுக 2 வார்டுகளிலும், அதிமுக 6 வார்டுகளிலும், சுயேட்சைகள் 5 வார்டுகளிலும் வெற்றிபெற்றனர். இதனால் மாங்காடு நகராட்சியையும் திமுக தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.