ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருவள்ளூர் : திமுக 3, சுயேச்சை 2, அதிமுக 1 இடங்களில் வெற்றி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022-ல் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் 158 பேர் போட்டியிட்டனர்.

News image
திருவள்ளூர் : திமுக 3, சுயேச்சை 2, அதிமுக 1 இடங்களில் வெற்றி
Updated On :22 பிப்ரவரி 2022, 6:05 am

DIN

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022-ல் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் 158 பேர் போட்டியிட்டனர். அதற்கான வாக்கு எண்ணும் மையம் திருப்பாச்சூர் திருமுருகன் கல்லூரியில் 8 மணியளவில் 1 வார்டு முதல் 6வது வார்டு வரை தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது.

1 வார்டில் மொத்த 1530 ஓட்டுகள் பதிவாகியது.  இதில் உதயசூரியன் சின்னத்தில் வசந்தி 980 வாக்குகளும் இரட்டை இலை சின்னத்தில் மஞ்சுளா 554 வாக்குகளும் பெற்று 426 வாக்கு வித்தியாசத்தில் உதயசூரியன் போட்டியிட்ட வசந்தி வெற்றி பெற்ளார்.

2 வது வார்டில் மொத்த 1658 வாக்குகள் பதிவானது . இதில் உதயசூரியன் சின்னத்தில் உதயம் மலர் 856 வாக்குகளும் இரட்டை இலைச் சின்னத்தில் ராகினி 798 வாக்குகளும் பெற்று 58 வாக்கு வித்தியாசத்தில் உதயசூரியன் சின்னத்தில் உதயம் மலர் வெற்றி பெற்றார் 

3வது வார்டில் மொத்தம் 1175 வாக்குகள் பதிவானது. இதில் இரட்டை இலைச் சின்னத்தில் சுமித்ரா 594 வாக்குகளும் உதயசூரியன் சின்னத்தில் மஞ்சுளா 512 வாக்குகளும் பெற்று 82 வாக்கு வித்தியாசத்தில் இரட்டை இலை சின்னத்தில் சுமித்ரா வெற்றி பெற்றார்.

4வது வார்டில் 1496 பதிவான வாக்குகள்.  இதில் சுயேச்சை வேட்பாளர் நீலாவதி 517 வாக்குகளும் இரட்டை இலை சின்னத்தில் பிரியங்கா 427 வாக்குகள் பெற்று சுயேச்சை வேட்பாளர் நீலாவதி 90 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

5- வது மொத்த வார்டில் மொத்தம் 1301 வாக்குகள் பதிவானது. இதில் சுயேட்சை வேட்பாளர் அம்பிகா 578 வாக்குகளும் அமமுக  வேட்பாளர் வள்ளி 357 வாக்குகளும் பெற்று சுயேச்சை வேட்பாளர் அம்பிகா 221 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

6-வது மொத்த வார்டில் மொத்தம் 1818 வாக்குகள் பதிவானது. இதில் உதயசூரியன் சின்னத்தில் பிரபாகரன் 928 வாக்குகளும்  இரட்டை இலைச் சின்னத்தில் ராஜி 645 வாக்குகளும் பெற்று உதயசூரியன் சின்னத்தில் பிரபாகரன் 283 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதுவரை முடிவுகள் வெளியான 6 வார்டுகளில் மூன்று திமுகவும் இரண்டு சுயேட்சைகளும் ஒரு அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.