ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருச்சி : கூத்தைப்பார் பேரூராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றியது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.

News image
திருச்சி : கூத்தைப்பார் பேரூராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றியது
Updated On :22 பிப்ரவரி 2022, 6:11 am

DIN

திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.


இது குறித்த விவரம் வருமாறு, 
திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பேரூராட்சிக்கு உட்பட்ட 18-வார்டு உறுப்பினர்களுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது.

இதற்கான வாக்கு எண்ணும் பணி  திருவெறும்பூர் அருகே காட்டூரில் உள்ள உருமு தனலட்சுமி கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக 14 இடங்களையும், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.  

இதில், திமுக கூட்டணி கட்சியினரே ஒட்டுமொத்தமாக பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

 எதிர்க்கட்சியே இல்லாத வகையில் 18 வார்டு உறுப்பினர் பதவிகளையும்  திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.