யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

விலக்கிக் கொள்ளப்படும் தேர்தல் நடத்தை விதிகள் : மாநில தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, அமல்படுத்தப்பட்டிருந்த தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் விலக்கிக் கொள்ளப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

News image
மாநில தேர்தல் ஆணையம்
Updated On :23 பிப்ரவரி 2022, 10:54 am

DIN


சென்னை: தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, அமல்படுத்தப்பட்டிருந்த தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் விலக்கிக் கொள்ளப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில்,
மறுவாக்குப் பதிவு நடைபெறும் கடலூர் மாவட்டம், புவனகிரி பேரூராட்சிப் பகுதிகளைத் தவிர்த்து மற்ற இடங்களுக்கு தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் உடனடியாக விலக்கிக் கொள்வது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி அன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள் நடைமுறைகளை (கடலூர் மாவட்டம், புவனகிரி பேரூராட்சிப் பகுதிகளைத் தவிர்த்து) தொடர்ந்து தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் உடனடியாக விலக்கிக் கொள்ளப்படுகிறது என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முனைவர் வெ. பழனிகுமார் (ஓய்வு) அறிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.