எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

மனிதநேயம் குறித்துப் பேசிய சிறுவனுக்கு முதல்வர் பாராட்டு

மனிதநேயம், மதநல்லிணக்கம் குறித்துப் பேசிய பள்ளி மாணவன் அப்துல் கலாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். 

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 11:40 am

DIN

மனிதநேயம், மதநல்லிணக்கம் குறித்துப் பேசிய பள்ளி மாணவன் அப்துல் கலாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். 

இதுகுறித்து முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'யாரையும் வெறுக்காமல் அன்பு செலுத்தவேண்டும் எனச் சிறுவன் அப்துல் கலாம் பேசிய காணொளிக் கண்டு நெகிழ்ந்தேன். நேரில் அழைத்துப் பாராட்டினேன்.

சாதி, மதப் பாகுபாடுகளைக் கற்பிக்காமல் சிறுவனின் மனதில் அன்பையும் மனிதநேயத்தையும் விதைத்த அவரது பெற்றோரும் ஆசிரியர்களும் பாராட்டுக்குரியர்' என்று பதிவிட்டுள்ளார். 

சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவன் அப்துல் கலாம், இணையதள தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 'யாரையும் வெறுக்காமல் அன்பு செலுத்த வேண்டும்; சாதி, மதம் கடந்து அன்பு செலுத்த வேண்டும்' என்று பேசியது இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.