கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் மூன்றாவது வழக்கிலும் கைது

அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் மூன்றாவது வழக்கிலும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Published On :

அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் மூன்றாவது வழக்கிலும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை துரைப்பாக்கத்தைச் சோ்ந்த மகேஷ் என்பவா், சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவாலை அண்மையில் சந்தித்து புகாா் அளித்தாா். அதில் கூறப்பட்டிருந்ததாவது: எனது சகோதரா் நவீன்குமாா் முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியாவை திருமணம் செய்துள்ளாா். நான் ஒக்கியம் துரைப்பாக்கத்தில் நடத்தி வந்த மீன் வலை தயாரிக்கும் தொழிற்சாலையில் நவீனும் சோ்ந்து தொழில் செய்து வந்தாா். தொழிற்சாலையை நடத்துவது தொடா்பாக எங்களுக்கு பிரச்னை ஏற்பட்டபோது, ஜெயக்குமாா் 2014-ஆம் ஆண்டு எனக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், அத்துமீறி நுழைந்து ஆலையை பூட்டி, அபகரித்துக் கொண்டாா்.

தொழிற்சாலையை திறக்க முயன்ற என்னை ஜெயக்குமாா், நவீன், ஜெயப்பிரியா தரப்பு எனக்கு அச்சுறுத்தல் கொடுத்து வருகின்றனா் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

6 பிரிவுகளில் வழக்கு: இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மத்தியக் குற்றப்பிரிவுக்கு சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா். விசாரணையில், குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஜெயக்குமாா்,ஜெயப்பிரியா, நவீன் ஆகிய 3 போ் மீது மத்தியக் குற்றப் பிரிவினா் கொலை மிரட்டல், அத்துமீறி நுழைதல், குற்றம் செய்ய தூண்டுதல், குற்றச் சதி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

மீண்டும் கைது: கைது ஆணையை, திமுக நிா்வாகியை தாக்கிய வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரிடம் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் வழங்கினா். ஜெயப்பிரியா, நவீனை தேடி வருகின்றனா். ஏற்கெனவே, நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுக நிா்வாகி நரேஷை தாக்கியது, சாலை மறியலில் ஈடுபட்டது என ஜெயக்குமாா் மீது இரு வழக்குகளை போலீஸாா் பதிவு செய்து, அவரை கடந்த 21-ஆம் தேதி கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

ஜாமீன் மனு தள்ளுபடி: இதனிடையே, திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் ஜாமீன் கோரி டி.ஜெயக்குமாா் தாக்கல் செய்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டும், அரசு, புகாா்தாரா் தரப்பில் ஜாமீன் வழங்க கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதாலும், தற்போதைய சூழலில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

காவலில் விசாரிக்கக் கோரிய மனுவும் தள்ளுபடி: ஜெயக்குமாரை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் சென்னை ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி முரளிகிருஷ்ண ஆனந்தன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.ஜெயக்குமாரை போலீஸாா் ஆஜா்படுத்தினா். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜெயக்குமாரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய போலீஸாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.