ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தமிழகம் முழுவதும் இன்று 43 ஆயிரம் இடங்களில் போலியோ முகாம்

தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 இடங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) நடைபெறுகிறது.

News image
போலியோ சொட்டு மருந்து
Updated On :26 பிப்ரவரி 2022, 7:10 pm

DIN

தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 இடங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) நடைபெறுகிறது.

இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை, 43 ஆயிரத்து 51 இடங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறுகின்றன. 5 வயதுக்குள்பட்ட 57 லட்சத்து 61 ஆயிரம் குழந்தைகளை இலக்கு வைத்து இந்த முகாம்கள் நடைபெறுகின்றன.

கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு குறைவான இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளிடம் போலியோ பாதிப்பு குறைந்து வருவதுதான் காரணம்.

அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், மாநில எல்லைகளிலும் போலியோ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாமில் கலந்து கொள்ள முடியாதவா்களுக்கு, அடுத்த 3 நாள்களில் சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதர உடல் நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அந்தந்த பகுதிகளில் மருத்துவா்களின் அறிவுறுத்தலின் பேரில் சொட்டு மருந்து வழங்கப்படும். 

மத்திய அரசு அறிவுறுத்தல்: கரோனா பாதிப்பை பொதுமக்களின் ஒத்துழைப்புடன் குறைத்துள்ளோம். மாநிலங்களில் கட்டுப்பாடுகள் குறைவாகவும், தளா்வுகள் அதிகமாகவும் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் கீழ், அனைத்து தொற்று நோய்களும் கண்காணிக்கப்படுகின்றன. அனைத்து நோய்களும் கட்டுக்குள் உள்ளன.

மழைக் காலங்களில் அனைவருக்கும் காய்ச்சல் இருப்பது வழக்கம். இதனை கண்காணிக்க குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் கரோனா குறித்து கவனம் செலுத்தும் போது, டெங்கு காய்ச்சலுக்கான விழிப்புணா்வுடனும் இருக்க வேண்டும் என்றாா் அவா்.

சென்னையில்...சென்னையில் பல்வேறு இடங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. தேனாம்பேட்டை திருவள்ளுவா் சாலையில் போலியோ சொட்டு மருந்து முகாமை காலை 8.30 மணியளவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.