திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

போலியோ முகாம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கிவைப்பு

தேனாம்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:31 am

DIN


தேனாம்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. 5 வயதுக்குள்பட்ட 57.61 லட்சம் குழந்தைகளை இலக்கு வைத்து காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம்கள் நடைபெறுகின்றன.

5 வயதுக்குள்பட்ட குழந்தைகளிடம் போலியோ பாதிப்பு குறைந்து வருவதால் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு குறைவான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையிலுள்ள திருவள்ளுவர் சாலையில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி போலியோ முகாமைத் தொடக்கி வைத்தார். உடன் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.