வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பேரவையில் முதல்வரின் பதிலுரை நேரலை செய்யப்படும்: அப்பாவு

சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் மீதான முதல்வரின் பதிலுரை நேரலை செய்யப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். 

News image
செய்தியாளர் சந்திப்பில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு
Updated On :5 ஜனவரி 2022, 7:02 am

DIN

சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் மீதான முதல்வரின் பதிலுரை நேரலை செய்யப்படும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். 

ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனா பரவும் வேகம் அதிகரித்து வருவதால், இரண்டு நாள்களுக்கு மட்டும் சட்டப்பேரவைக் கூட்டம் நடத்தப்படுகிறது என்று கூறினார். 

மேலும் பேசிய அவர், மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு நாளை இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும்.

கேள்வி பதில் நேரத்துடன் சட்டப்பேரவை தொடங்கும். சட்டப்பேரவையில் கேள்வி நேரம் மட்டும் நேரலை செய்யப்படும். பதிலளிப்பதையும் நேரலை செய்வதற்கு போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படு வருகிறது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் வெள்ளிக்கிழமை பதிலுரை  வழங்குவார். அதனுடன் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிறைவடையும் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.