சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க 2 தவணை தடுப்பூசி கட்டாயம்
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்க 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்க 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க புதிய கட்டுப்பாடுகளை விதித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் ஜன. 10 முதல் அமலுக்கு வருகின்றன.
அதன்படி, ரயிலில் பயணிப்போர் கண்டிப்பாக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்.
மேலும், புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்க UTS செயலி வழியாக டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...