சென்னையில் பொங்கலுக்குப் பிறகு மின்வெட்டு ஏற்படும் இடங்கள்

சென்னையில் பொங்கலுக்குப் பிறகு மின்வெட்டு ஏற்படும் இடங்கள்

சென்னையில் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு ஜனவரி 19-ஆம் தேதி சென்னையின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும் இடங்களை மின்பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
Published on


சென்னையில் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு ஜனவரி 19-ஆம் தேதி சென்னையின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும் இடங்களை மின்பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம்  நிறுத்தப்படுவதாகவும், மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் கொடுக்கப்படும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி, 19.01.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை இந்திரா நகர், வேளச்சேரி மெயின் ரோடு, புவனேஸ்வரி நகர், வேம்புலியம்மன் கோயில் தெரு, சந்தனா அம்மாள் நகர், அண்ணா தெரு ஆகிய பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும்.

சேத்துப்பட்டு/மகாலிங்கபுரம் பகுதி : குளக்கரை சாலை, ஸ்டெர்லிங் அவென்யூ, புஷ்பா நகர், மகாலிங்கபுரம் பிரதான சாலை, சரோஜினி தெரு, ஜெயலட்சுமிபுரம் 2, 3, 4வது தெருகள, சரஸ்வதி தெரு, ராமநாய்க்கன் தெரு, கிருஷ்ணமச்சாரி தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com