இதுகுறித்து, பெருந்துறை காவல் துறையில் சுப்பிரமணியன் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, நேற்று (வெள்ளிக்கிழமை), சத்தியமங்கலம், பன்னாரி ரோடு, உதயம் நகரைச் சேர்ந்த ரங்கசாமி மகன் பால்ராஜ்,60. சத்தியமங்கலம், தடத்தபள்ளி, இக்கரை, வெள்ளியம்பாளையம்புதூரைச் சேர்ந்த சந்திரன்,48. சத்தியமங்கலம், ராஜீவ் நகரைச் சேர்ந்த நடராஜன் மகன் சீனிவாசன்,41, ஆகியோரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய தலை மறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.