நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக இன்று வெளியிட்டுள்ளது.
21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக பிப்ரவரி 19-இல் நடைபெற உள்ளது. பிப். 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஏற்கெனவே வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக இன்று வெளியிட்டுள்ளது.