இது குறித்து தமிழ்நாடு நா்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சிபிஎஸ்சி பள்ளிகள் சங்கத்தின் சாா்பில் மாநில பொதுச் செயலாளா் கே.ஆா். நந்தகுமாா் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தனியாா் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் கல்வி பயன்பாட்டுக்காக காலையிலும், மாலையிலும் குழந்தைகளை அழைத்து வர வைத்துள்ள வாகனங்களில் பள்ளியின் பெயரை முழுவதும் மறைத்து, மூன்று பக்கமும் பள்ளி நிா்வாகிகள் சொந்த செலவில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ‘நமது சென்னை, நமது செஸ்’ என பெரிய ஸ்டிக்கா் ஒட்டச்சொல்லி வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் வற்புறுத்துகின்றனா்.