தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நெகிழி தடையை செயல்படுத்த இலவச தொலைபேசி எண் வெளியீடு

ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களுக்கான தடையை திறம்பட செயல்படுத்துவது தொடா்பான உதவி, வழிகாட்டுதல்களுக்காக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது.

News image
Updated On :7 ஜூலை 2022, 10:11 pm

DIN

ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களுக்கான தடையை திறம்பட செயல்படுத்துவது தொடா்பான உதவி, வழிகாட்டுதல்களுக்காக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் உற்பத்தி, இறக்குமதி, சேமித்தல், விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு ஜூலை 1-ஆம் தேதி நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பான விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்வோா் மீது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கும். இந்த வகை நெகிழிப் பொருள்களை இறக்குமதி செய்தல், இருப்பு வைத்தல், விநியோகம் செய்தல், விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்துவோா் மீது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தத் தடையை முறையாக செயல்படுத்தும் வகையிலும், அதற்கான உதவி, வழிகாட்டுதல், தெளிவுபடுத்தல் ஆகியவற்றுக்காக கட்டுப்பாடு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு மையத்தை 1800 425 6750 என்ற இலவச எண்ணில் அனைத்து நாள்களிலும் ஜூலை 31-ஆம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.