வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே பொது விநியோகக் கடைக்கு நிரந்தரக் கட்டடம் கட்டும் விவகாரம் தொடர்பாக கிராமத்தினர் சனிக்கிழமை (ஜூலை. 9) உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
பஞ்சநதிக்குளம் நடுசேத்தி ஊராட்சியில் பொது விநியோகத் திட்டக் கடைக்கு நிரந்தரக் கட்டடம் கட்டப்படவுள்ளது.
இதையும் படிக்க | பள்ளிகளில் வேலைவாய்ப்புப் பதிவு செய்யும் நடைமுறை ரத்து
இந்த கட்டடத்தை ஊராட்சி மன்றத்தால் தீர்மானம் கொண்டுவரப்பட்ட இடத்தை தவிர்த்து வேறு இடத்தில் கட்டடம் கட்டப்படுவதைக் கண்டித்து ஊர் பிரமுகர் கோவிந்தன் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.