பக்ரீத்: அதிராம்பட்டினத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒரே இடத்தில் சிறப்பு தொழுகை நடத்தினர்.
பக்ரீத்: அதிராம்பட்டினத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறப்புத் தொழுகை
Published on
Updated on
1 min read


பக்ரீத் பண்டிகையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒரே இடத்தில் சிறப்பு தொழுகை நடத்தினர்.


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் நகராட்சியில் இஸ்லாமியர்கள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாசல்களில் தொழுகை நடத்தி வருவது வழக்கம்.

பக்ரீத் பண்டிகை அன்று அனைவரும் ஒன்று கூடி கூட்டுத் தொழுகை நடத்துவது ஒவ்வொரு பக்ரீத் பண்டிகை அன்றும் நடைபெறும். இந்த நிலையில் இன்று பக்ரீத் பண்டிகை முன்னிட்டு அதிராம்பட்டினம் சிஎம்பி லைன் கல்லு கொள்ளை பகுதியில் உள்ள திடலில் பெண்கள் உட்பட 1000க்கும் மேற்பட்ட  இஸ்லாமியர்கள் இன்று காலை சிறப்பு கூட்டுத் தொழுகை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com