வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

நாமக்கல் ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி நாமக்கல் ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

News image

நாமக்கல் ஈத்கா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்.

Updated On :10 ஜூலை 2022, 5:51 am

DIN

நாமக்கல்: இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை நாமக்கல்லில் கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி, நாமக்கல் பேட்டை இஸ்லாமிய ஜாமியா பள்ளிவாசல் சார்பில் பக்ரீத் பண்டிகை  சிறப்புத் தொழுகை நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் காலை 8 மணிக்கு நடைபெற்றது.

இத்தொழுகையை பள்ளிவாசல் இமாம் சாதிக் அஷ்ரத் முன்னின்று நடத்தினார். பள்ளிவாசல் முத்தவல்லி  ஹவ்லத் கான் முன்னிலை வகித்தார். இதில்  ஆயிரக்ணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.  

மேலும்,  உலகில் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் அமைதி நிலவ வேண்டும் என்ற வகையிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகைக்குப் பின்  இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டியணைத்து பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். மேலும் ஏழைகளுக்கு குர்பானி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.