நாமக்கல்: இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை நாமக்கல்லில் கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி, நாமக்கல் பேட்டை இஸ்லாமிய ஜாமியா பள்ளிவாசல் சார்பில் பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகை நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் காலை 8 மணிக்கு நடைபெற்றது.
இத்தொழுகையை பள்ளிவாசல் இமாம் சாதிக் அஷ்ரத் முன்னின்று நடத்தினார். பள்ளிவாசல் முத்தவல்லி ஹவ்லத் கான் முன்னிலை வகித்தார். இதில் ஆயிரக்ணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், உலகில் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் அமைதி நிலவ வேண்டும் என்ற வகையிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகைக்குப் பின் இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டியணைத்து பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். மேலும் ஏழைகளுக்கு குர்பானி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்: சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

நாகா்கோவில் சிறையில் கைதி உயிரிழந்த வழக்கில் சக கைதிகள் 8 போ் கைது - 3 வாா்டன்கள் இடைநீக்கம்

பழனி கோயில் நில முறைகேட்டின் பின்னணி என்ன? தொடர்புடையோர் எங்கே?







