ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

முல்லைப் பெரியாறு அணைக்கு ஒரே நாளில் கூடுதலாக 1,144 கன அடி நீர்வரத்து

கேரளத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு ஒரே நாளில் 1,144 கன அடி தண்ணீர் கூடுதலாக வந்தது.

News image
முல்லைப் பெரியாறு அணைக்கு ஒரே நாளில் கூடுதலாக 1,144 கன அடி நீர்வரத்து
Updated On :12 ஜூலை 2022, 8:11 am

DIN

கம்பம்: கேரளத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு ஒரே நாளில் 1,144 கன அடி தண்ணீர் கூடுதலாக வந்தது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள கேரளத்தில் தற்போது தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்குள் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.

திங்கள்கிழமை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணையில், 43 மில்லி மீட்டர் மழையும், தேக்கடியில், 28 மில்லி மீட்டர் மழையும் பெய்தது, இதனால் அணைக்கு வினாடிக்கு, 2,122 கன அடி தண்ணீர் வந்தது.

செவ்வாய்க்கிழமை பெரியாறு அணையில், 44 மில்லிமீட்டர் மழையும், தேக்கடி ஏரியில், 13 மி.மீ. மழையும் பெய்தது. இதனால் அணைக்கு வினாடிக்கு 3,266 கன அடி தண்ணீர் வந்தது. அதாவது ஒரே நாளில் வினாடிக்கு 1,144 கன அடி தண்ணீர் கூடுதலாக வந்தது குறிப்பிடத்தக்கது.

அணை நிலவரம்
முல்லைப் பெரியாறு அணையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி நீர் மட்டம் 129.05 அடி உயரமாகவும் (மொத்த உயரம் 142 அடி), அணைக்குள் நீர் இருப்பு 4,493 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து வினாடிக்கு 3,266 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 1,655 கன அடியாகவும் இருந்தது. தற்போது தொடர் மழை பெய்து வருவதால் அணைக்குள் நீர் வரத்து அதிகரித்து வரலாம் என்று அணை பொறியாளர் ஒருவர் தெரிவித்தார்.

மின்சார உற்பத்தி

தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள 4 மின்னாக்கிகளில் இரண்டு மின்னாக்கிகளில் தலா, 42 மெகாவாட்டும், மற்ற இரண்டு மின்னாக்கிகளில் தலா 32 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி என மொத்தம் 148 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது, நான்கு மின்னாக்கிகளும் கடந்த ஜூலை4 இல் இருந்து இயங்கி வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.