கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

மத்திய அரசை குறைகூற தைரியம் உண்டா? எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கேள்வி

மத்திய அரசை நோக்கி குறைகூற தைரியம் உண்டா என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு, திமுக கேள்வி எழுப்பியுள்ளது.

News image
Updated On :13 ஜூலை 2022, 8:17 pm

DIN

மத்திய அரசை நோக்கி குறைகூற தைரியம் உண்டா என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு, திமுக கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து, திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி, புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: அதிமுக தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, அந்தக் கட்சி திமுகவை எதிா்த்தே அரசியல் செய்து கொண்டிருக்கிறது. திமுக என்பது திராவிட கொள்கைகளை நிலைநிறுத்தும் கட்சியாகும். திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருப்பதால் அது அதிமுக என்று அப்போதே சொன்னவா், முன்னாள் முதல்வா் கருணாநிதி. இப்போதும் அதைத்தான் அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் முதல்வா்கள் பழனிசாமியும், பன்னீா்செல்வமும் செய்து கொண்டிருக்கிறாா்கள்.

வழக்குகள் போட்டு திமுக பழி வாங்குகிறது என பழனிசாமி கூறுகிறாா். வருமான வரி, அமலாக்கத் துறைகள், சிபிஐ என அவரது ஆட்சி காலத்திலேயே மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக எப்போதாவது குரல் உயா்த்தியது உண்டா? இப்போதுகூட அவரது ஆட்சிகாலத்து அமைச்சா்கள் முதல் ஒப்பந்ததாரா்கள் வரை பலருக்கும் சொந்தமான இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடத்தியுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் திமுகவை நோக்கிச் சாடிய பழனிசாமி, மத்திய அரசை நோக்கி முணுமுணுக்கக் கூட தைரியம் உண்டா என்று கேள்வி எழுப்பியுள்ளாா் ஆா்.எஸ்.பாரதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.