குரங்கு அம்மை: 'ஆய்வகம் அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை'
குரங்கு அம்மைக்கு ஆய்வகம் அமைக்க ஐசிஎம்ஆரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டாவது நபருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குரங்கு அம்மைக்கு தொற்றை கண்டறிய ஆய்வகம் அமைக்க ஐசிஎம்ஆரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும், பன்னாட்டு விமானநிலையம் உள்ள மாவட்டங்களில் குரங்கு அம்மைக்கு என 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கவும், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
'தமிழ்நாட்டில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை. அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட நாடுகளில் குரங்கம்மை பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.