பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கோவையில் ஒன்றன் பின் ஒன்றாக கார் மோதல்: தடுப்புகள் அமைத்தும் தவிர்க்க முடியாத மேம்பால விபத்து 

கோவையில் மேம்பாலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக கார் மோதிக்கொண்டதில் காரில் பயணித்தவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தடுப்புகள் அமைத்தும் தவிர்க்க முடியாத மேம்பால விபத்து கோவை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள

News image
Updated On :20 ஜூலை 2022, 5:31 am

DIN

கோவையில் மேம்பாலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக கார் மோதிக்கொண்டதில் காரில் பயணித்தவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தடுப்புகள் அமைத்தும் தவிர்க்க முடியாத மேம்பால விபத்து கோவை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கோவை-திருச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் விபத்துகள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. ஏற்கனவே பாலத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இரண்டு பேர், அதிவேகம் காரணமாக பாலத்தின் மேல் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தனர். 

இந்த நிலையில் அந்த பாலத்தில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. ஆனால், வேகத்தடைகள் அமைக்கப்பட்ட ஒரு சில நாள்களிலேயே மீண்டும் ஒருவர் பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இப்படி 3 பேர் பலியான நிலையில், மேம்பாலத்தின் இரு புறங்களிலும் இரும்பு பென்சிங் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

Story image

கோவையில் மேம்பாலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக கார் மோதிக்கொண்ட கார்.

இதனிடையே புதன்கிழமை கோவை அரசு மருத்துவமனையில் இருந்து ராமநாதபுரம் நோக்கிச் சென்ற இரண்டு கார்கள் திருச்சி சாலை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த அந்த கார்கள், மேம்பாலத்தில் சுங்கம் ரவுண்டானா அருகே போடப்பட்டிருந்த வேகத்தடைகளை கார் ஓட்டுநர்கர் இரண்டு பேரும் கவனிக்கவில்லை என்று தெரிகிறது. 

திடீரென பிரேக் பிடித்ததில் இரண்டு கார்களும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்தவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தொடர்ந்து இந்த மேம்பாலத்தில் விபத்துகள் நடைபெற்று வருவது கோவை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.