மின்கட்டண உயர்வைக் கைவிட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம் 

தமிழக அரசின் உத்தேச மின்கட்டண உயர்வைக் கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மின்கட்டண உயர்வைக் கைவிட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம் 
Published on
Updated on
1 min read

தமிழக அரசின் உத்தேச மின்கட்டண உயர்வைக் கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் 2022 ஜூலை 21, 22 ஆகிய தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகமது தலைமையில் தர்மபுரியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசின் உத்தேச மின்கட்டண உயர்வைக் கைவிட வேண்டும்.

குறுவை சாகுபடி நெல்பயிருக்கு பயிர் காப்பீடு செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com