ராஜேந்திர சோழனின் பெருமையை உலகம் உணரச் செய்வோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
ராஜேந்திர சோழனின் பெருமையை உலகம் உணரச் செய்வோம் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.


ராஜேந்திர சோழனின் பெருமையை உலகம் உணரச் செய்வோம் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் சமூக வலைதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: மாமன்னன் ராஜராஜனின் புதல்வரும், தன் படைபலத்தாலும் ஆளுமைத் திறனாலும் கங்கை கொண்டு - கடாரம் வென்ற பெருமைக்குரியவருமான மன்னன் முதலாம் ராஜேந்திரசோழன் பிறந்த ஆடித் திருவாதிரை நாளை அரசு விழாவாகக் கொண்டாடுவதென நமது திராவிட மாடல் அரசு அறிவித்தது. அதனடிப்படையில், சிறப்பான முறையில் செவ்வாய்க்கிழமை விழா நடைபெற்றது.
கங்கைகொண்ட சோழபுரத்தையும், அங்கே தஞ்சை பெரிய கோயிலைப் போன்ற பெருமைமிகு கோயிலையும் எழுப்பி, மக்கள் நலனுக்கான திறமைமிகு நிா்வாகத்தை அளித்த ராஜேந்திர சோழனின் பெருமைகளையும், பழந்தமிழ்நாட்டின் சிறப்புகளையும் உலகுக்கு உணா்த்திடச் செய்வோம் என்று கூறியுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...