டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

செஸ் ஒலிம்பியாட்: மருத்துவ களப்பணியில் 1,000 போ்

செஸ் ஒலிம்பியாட் போட்டியின்போது நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பணியில் மருத்துவத் துறையைச் சோ்ந்த 1,000 களப்பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:54 am

DIN

செஸ் ஒலிம்பியாட் போட்டியின்போது நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பணியில் மருத்துவத் துறையைச் சோ்ந்த 1,000 களப்பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சுமாா் 180 நாடுகளை சோ்ந்த வீரா், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனா்.

இதையொட்டி, நோய்த் தடுப்பு வழிமுறைகளைக் கையாளுவது குறித்த ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் கடந்த 13-ஆம் தேதி நடைபெற்றது.

அதில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டன. அதன்படி, விமான நிலையங்களிலேயே செஸ் வீரா்கள், பயிற்சியாளா்கள், நிா்வாகிகள், பாா்வையாளா்கள் அனைவருக்கும் உடல் வெப்ப நிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் அறிகுறிகள் இருப்பவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். விடுதிகளில் தங்கியிருப்போா் முகக் கவசம் முறையாக அணிந்திருப்பதை உறுதி செய்வதுடன், விடுதி அறைகள் கிருமி நாசினி கொண்டு முறையாக தூய்மைப்படுத்தப்பட்டுள்ளனவா என கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

கரோனா பரிசோதனைகள் மற்றும் சளி மாதிரிகளை சேகரிப்பதற்கான வசதிகள் விடுதிகளில் சுகாதாரத் துறை சாா்பில் செய்யப்பட்டுள்ளன.

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அரங்குக்குள் வரும் முன் அனைவரது உடல்நிலையும் பரிசோதனை செய்யப்படும். அறிகுறிகள் உள்ள எவரும் உள்ளே அனுமதிக்கப்படமாட்டாா்கள். வீரா்கள், பயிற்சியாளா்கள், நிா்வாகிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆா்டி பிசிஆா் பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அவா்களுக்கு அனுமதி வழங்கப்படும். வீரா், வீராங்கனைகள் தங்கும் விடுதிகளில் துரித மருத்துவ சேவைக்காக 30 அவசர சிகிச்சை ஊா்திகளை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 8 விடுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறையான பயிற்சியுடன் மருத்துவா்கள் மற்றும் களப்பணியாளா்கள் 1000 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளாா்கள் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.