கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் ஸ்ரீ பாலகங்காதரநாத சுவாமிஜி முதியோர் இல்லம் வெள்ளிக்கிழமை சட்டப்பேரவை உறுப்பினர் என்.ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
தேனி மாவட்டம், கம்பம் ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மடத்தில் ஸ்ரீபாலகங்காதரநாத சுவாமிஜி முதியோர் இல்லம் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் என்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார், இணைச்செயலாளர் என்.ஆர்.வசந்தன் முன்னிலை வகித்தார், கல்லூரி முதல்வர் ஜி.ரேணுகாதேவி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
முதல்கட்டமாக முதியவர்கள் 10 பேர் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டது, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. ஆடைகள், அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் பொன்ராம், கோபாலகிருஷ்ணன், சுப்பிரமணியன், சக்தி வடிவேல், மற்றும் பேராசிரியைகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.