இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் திரௌபதி அம்மன் அர்ஜுனன் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கோவிலில் திரௌபதி அம்மனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து திரௌபதி அம்மன் அர்ஜுனன் சுவாமி மணகோலத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார். பின் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்த திருக்கல்யாணம் வைபோகத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை துரியன் படுகளம், மாலை தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளது.