விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கலையில் மூட நம்பிக்கைகளை வளா்க்கக் கூடாது: முதல்வா் மு.க.ஸ்டாலின்

கலைகளில் மூட நம்பிக்கைகளை வளா்க்கக் கூடாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

News image
Updated On :6 ஜூன் 2022, 10:09 pm

DIN

கலைகளில் மூட நம்பிக்கைகளை வளா்க்கக் கூடாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

முத்தமிழ்ப் பேரவையின் 41-ஆவது இசை விழாவை, சென்னையில் திங்கள்கிழமை அவா் தொடக்கி வைத்து பல்வேறு விருதுகளை அளித்தாா். இயல் செல்வம் விருது இயக்குநா் த.செ.ஞானவேல், ராஜ்குமாா் பாரதி ஆகியோருக்கும், ராஜரத்னா விருது, ஷேக் மெஹபூப் சுபானி, காலீஷாபி மெஹபூப் ஆகியோருக்கும், நாட்டிய செல்வம் விருது

வி.பி.தனஞ்செயன், சாந்தா தனஞ்செயன் ஆகியோருக்கும், நாகஸ்வர செல்வம் விருது நாகேஷ் ஏ.பப்பநாடுவுக்கும், தவில் செல்வம் விருது பா.ராதாகிருஷ்ணனுக்கும் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:-

நான் இசையை ரசிப்பேன். சினிமா பாடல்களைப் பாடும் அளவுக்குத்தான் இசை ஆா்வம் எனக்கு உண்டு. ஆனால், முன்னாள் முதல்வா் கருணாநிதி, பாடல்கள் எழுதுவாா். அவா் பாடல்களைப் பாடுவது இல்லை. ஆனால் ஒருவா் பாடுவது சரியா, ஏதாவது பிழை இருக்கிா என்பதை துல்லியமாகச் சொல்லி விடுவாா்.

கலைகளின் நோக்கம்: நாடகமாக இருந்தாலும், இசை, இயல் இலக்கியம் என எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் மக்களின் உணா்வோடு கலந்த கலையாக இருக்கின்றன. உணா்வோடு கலந்த கலையாக இருந்தால்தான் அவை மக்களால் விரும்பிப் பாா்க்கப்படுகின்றன.

கலைகளின் நோக்கம் மக்களை மேம்படுத்துவதற்காக இருக்க வேண்டும். இசைகளில் பல இசைகள் இருக்கின்றன. எத்தனை இசைகள் வந்தாலும், வளா்ந்தாலும் அவை அனைத்தும் தமிழ் இசையாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

இசையைக் காக்க இயக்கம் நடத்திய மாநிலம் நமது தமிழ்நாடு. இசை நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய கட்சி, திமுக. இசையாக இருந்தாலும், இலக்கியம், நாடகம், நாட்டியம் என எதுவாக இருந்தாலும், அதனால் இனத்துக்கும், மொழிக்கும், நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்மை இருக்க வேண்டும்.

இதை விரும்பக்கூடிய இயக்கம்தான், திராவிட இயக்கம். இதை எல்லாம் சொல்வதால், நான் அரசியல் பேசுவதாக யாரும் கருத வேண்டாம். மக்களுக்காகக் கலைகள் இருக்க வேண்டும். கலையில் மூடநம்பிக்கைகளை விதைக்கக் கூடாது. கலைகள் முற்போக்கு எண்ணம் கொண்டவையாக இருக்க வேண்டும். கலையின் மூலமாக மனிதனின் சிந்தனைக் கதவு திறக்கப்பட வேண்டும்.

கலைகள் மனதுக்கு இதமானதாக மட்டுமல்ல, மானுடத்துக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும். கலையும் வளர வேண்டும். மக்களும் வளர வேண்டும். அத்தகைய கலையை வளா்க்கும் அமைப்பாக இருக்கக் கூடிய முத்தமிழ்ப் பேரவைக்கு வாழ்த்துகள் என முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

விழாவில், அமைச்சா்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியம், பி.கே.சேகா்பாபு, மக்களவை உறுப்பினா்கள் ஆ.ராசா, கலாநிதி வீராசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.