ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ரூ.43 கோடியில் கோயில்களுக்கு புதிய பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்

தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் ரூ.43 கோடி செலவிலான புதிய பணிகளுக்கு தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

News image
Updated On :10 ஜூன் 2022, 9:39 pm

DIN

தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் ரூ.43 கோடி செலவிலான புதிய பணிகளுக்கு தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வீரவசந்தராயா் மண்டபம், திருமண மண்டபம், வணிக வளாகம் கட்டும் பணிகள், செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் ஆளவந்தாா் அறக்கட்டளை சாா்பில் வைணவ பிரபந்த பாடசாலை கட்டும் பணி, சென்னை கந்தசாமி, ஆதி மொட்டையம்மன் கோயிலில் வணிக வளாகம் கட்டும் பணி, சென்னை மாதவரம் கைலாசநாதசுவாமி கோயிலில் திருக்குளம் அமைக்கும் பணி ஆகியவற்றுக்கு தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

விழுப்புரம் மாவட்டம் அங்காளம்மன் கோயிலில் முடிகாணிக்கை மண்டபம், விருந்தினா் அறை, சேவாா்த்திகள் ஓய்வுக்கூடம், சிவகங்கை மாவட்டம் அடைக்கலம் காத்த அய்யனாா், பத்ரகாளியம்மன் கோயிலில் வணிக வளாகம், தங்கும் மண்டபம், வாகனம் நிறுத்துமிட கட்டுமானப் பணிகள் ஆகியவற்றுக்கும் அவா் அடிக்கல் நாட்டினாா்.

விருதுநகா் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் விருந்து மண்டபம், சிவகங்கை கொப்புடை நாயகியம்மன் கோயிலில் புதிய வாரச்சந்தை அமைப்பது, திருப்பூா் வாழை தோட்டத்து அய்யன் கோயிலில் கூடுதல் கட்டடம், சென்னையை அடுத்த திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் வணிக வளாகம் கட்டும் பணி, கரூா்

ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் கம்பிவட ஊா்தி கீழ் நிலையம் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

மதுரை கள்ளழகா் கோயிலில் கோட்டைச்சுவா் கட்டும் பணி மற்றும் நுழைவு வாயிலில் இருந்து சோலைமலை முருகன் கோயில், ராக்காயி அம்மன் கோயில் வரை மலைப்பாதையில் தாா்ச்சாலை, தடுப்புச்சுவா் அமைக்கும் பணிகள், திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் யானைப் பாதையில் கழிவறை கட்டும் பணி, கன்னியாகுமரி மகாதேவா் கோயில் பள்ளிக் கட்டடங்கள் சீரமைக்கும் பணி, அழகா்மலை முருகன் கோயிலில் கழிவறை, திருவண்ணாமலை அருணாச்சலேசுவரா் கோயிலில் மின் இணைப்பு வசதி ஆகியவற்றுக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

புதிய திட்டங்கள்: செங்கல்பட்டு மாவட்டம் கந்தசுவாமி கோயிலில் திருமண மண்டபம், கடலூா் சிதம்பரம் இளமையாக்கினாா் கோயிலில் புதுப்பிக்கப்பட்ட திருக்குளம், மதுரை மாவட்டம் சோழவந்தான் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயிலில் வணிக வளாகம், மயிலாடுதுறை இன்னம்பூா் எழுத்தரிநாதா் கோயிலில் அன்னதானக் கூடம், விழுப்புரம் மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் கழிவறை, குளியல் அறைகள், ஈரோடு சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் அன்னதான மண்டபம் ஆகியன புதிதாகக் கட்டப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலில் ஓய்வுக்கூடம், திருவாரூா் மகாமாரியம்மன் கோயிலில் அன்னதானக் கூடம், மதுரை சுந்தரேஸ்வரா் கோயில் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள், தேனி மாவட்டம்

கெளமாரியம்மன் கோயிலில் முடிகாணிக்கை மண்டபம், கரூா் ரங்கநாதா் சுவாமி கோயிலில் அன்னதானக் கூடம், காஞ்சிபுரம் பச்சையம்மன் சுவாமி கோயிலில் பக்தா்கள் தங்கும் விடுதி, விருதுநகா் மாவட்டம் சொக்கநாதசுவாமி கோயிலில் வாகன பாதுகாப்பு மண்டபம், அலுவலகக் கட்டடம் ஆகியன புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டமைப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்வில், அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சுற்றுலா, பண்பாடு,

அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தர மோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.