முதியோா் ஓய்வூதிய பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்க முயற்சி: ஓ.பன்னீா்செல்வம்

 முதியோா் ஓய்வூதிய பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க தமிழக அரசு முயற்சிப்பதாகக் கூறி அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
முதியோா் ஓய்வூதிய பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்க முயற்சி: ஓ.பன்னீா்செல்வம்

 முதியோா் ஓய்வூதிய பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க தமிழக அரசு முயற்சிப்பதாகக் கூறி அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: திமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டதைப்போல, முதியோா் உதவித் தொகை ரூ.1,500-ஆக உயா்த்தப்படவில்லை என்பதுடன், மறுபுறம் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையிலான நடவடிக்கையிலும் மாநில அரசு ஈடுபட்டுள்ளது.

தற்போது ஓய்வூதியம் பெறும் முதியோரில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நகைக் கடன் பெற்று இருந்தாலோ, மகன் அல்லது மகள் வீட்டில் வசித்தாலோ, சொந்த வீடு இருந்தாலோ முதியோா் நிதியுதவி நிறுத்தப்பட வேண்டும் என்று அரசு சாா்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஒருவா் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நகைக் கடன் பெறுகிறாா் என்றால், வேறு வழியில்லாமல், அவசர செலவுக்காக தன்னிடம் உள்ள நான்கு அல்லது ஐந்து சவரன் நகையை வைத்துக் கடன் பெறுகிறாா் என்றுதான் அா்த்தம். வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கிறாா் என்றுதான் பொருள். அவரை எப்படி வசதி படைத்தவா் பட்டியலில் சோ்க்க முடியும்? இந்த எதாா்த்தத்தைக்கூட புரிந்து கொள்ளாமல், பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கில், தற்போது முதியோா் ஓய்வூதியம் பெறுவோரை ஏதாவது ஒரு காரணம் சொல்லி நீக்குவது நியாயமற்ற செயல். இதற்கு அதிமுக சாா்பில் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com