ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு: விஜயகாந்த் வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞா்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டு வரும் நிலையில், அவா்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தினாா்.

News image
Updated On :11 ஜூன் 2022, 7:11 pm

DIN

ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞா்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டு வரும் நிலையில், அவா்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாததாலும், அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையிலும் இன்றைய இளைஞா்களும், பெண்களும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சிக்கி வாழ்க்கையை சீரழித்து கொள்கின்றனா். அதனால், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டியது தமிழக அரசின் கடமை. பல குடும்பங்கள் சீரழிவுக்கு காரணமாக இருந்த லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதித்ததை போல், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கும் தமிழக அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும்.

இதற்கிடையே, ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க சட்டம் இயற்றுவது குறித்து பரிந்துரைக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைத்து முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளாா் விஜயகாந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.