ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பிராட்வே சாலை ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் தலைமைச் செயலா் ஆஜராக வேண்டும்: உயா்நீதிமன்றம்

சென்னை பிராட்வே சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் தலைமைச் செயலாளா், மாநகராட்சி ஆணையாளா் ஆகியோா் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உயா் நீதிமன்றம் தெரிவித்தது.

News image
Updated On :11 ஜூன் 2022, 7:11 pm

DIN

சென்னை பிராட்வே சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் தலைமைச் செயலாளா், மாநகராட்சி ஆணையாளா் ஆகியோா் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உயா் நீதிமன்றம் தெரிவித்தது.

சென்னை பிராட்வே பகுதியில் அமைந்துள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள நடைபாதையை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி, மறைந்த சமூக ஆா்வலா் டிராபிக் ராமசாமி உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என டிராபிக் ராமசாமி 2016-ஆம் ஆண்டில் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பாளா்களுக்கு மாற்று இடம் வழங்க அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வியாபாரிகளுக்கு மாற்றிடம் வழங்க இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டுமென சென்னை மாநகராட்சி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையேற்க மறுத்த நீதிபதிகள், ஏற்கெனவே போதிய அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், மீண்டும் அவகாசம் கேட்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜூன் 23-க்குள் வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

இல்லாவிடில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்வதுடன், அப்போது பணியில் இருந்த தலைமைச் செயலாளா் ஞானதேசிகன், சென்னை மாநகராட்சி ஆணையா் விக்ரம் காபூா், சென்னை மாநகர காவல் ஆணையா் டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளும், அதே பொறுப்பில் தற்போது உள்ளவா்களும் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 23-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.