மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காரைக்குடி அருகே அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் தேரோட்டம்

அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் கோயில் வைகாசிப் பெருந்திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை மாலையில் தேரோட்டம் நடைபெற்றது.

News image
Updated On :14 ஜூன் 2022, 1:44 pm

DIN

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தென் திருப்பதி என்றழைக்கப்படும் அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் கோயில் வைகாசிப் பெருந்திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை மாலையில் தேரோட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள இக்கோயில் செட்டிநாடு பகுதியில் உள்ள பிரசித்த பெற்ற வைணவ ஸ்தலமாகும்.

இங்கு ஆண்டுதோறும் வைகாசி பெருந்திருந் திருவிழா 15 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா கடந்த ஜூன் 6-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அன்று முதல் தினந்தோறும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா நடைபெற்றது. நேற்று (திங்கள்கிழமை) இரவு தங்கக் குதிரைவாகனத்தில் எழுந்தருளி சுவாமி திருவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

Story image

முக்கிய விழாவான 9 ஆம் நாள் தேரோட்டம் இன்று (செவ்வாய்க் கிழமை) மாலையில் நடைபெற்றது. முன்னதாக காலையில் ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவியுடன் திருவேங்கடமுடையான் சிறப்பு அலங்காரத்துடன் திருத் தேரில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

மாலையில் நாட்டார்கள் பழங்கள், மலர்கள் தட்டுகளுடன் ஊர்வலமாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஊர்வலத்தின் முன்பாக நாட்டிய குதிரைகள் நடனம், செண்டை மேளம், கெட்டிமேளம் முழங்க தேர்நிலைக்கு வந்தனர். அதனை தொடர்ந்து மாலை 4.45 மணியளவில் நாட்டார்கள், பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டம் தொடங்கி தேரோடும் வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் தேர் நிலையை அடைந்தது.

வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 17) அலங்கார பங்களா தெப்பத் திருவிழா நடைபெறும். தொடந்து ஜூன் 20-ந் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.