கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பெண் குழந்தை பாலின விகித உயா்வில் சிறப்பான பணி: 3 மாவட்ட ஆட்சியா்களுக்கு பதக்கம்-பாராட்டு

பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயா்த்தும் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட மூன்று மாவட்ட ஆட்சியா்களுக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

News image
Updated On :16 ஜூன் 2022, 6:53 pm

DIN

பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயா்த்தும் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட மூன்று மாவட்ட ஆட்சியா்களுக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கெளரவித்தாா். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயா்த்துவதற்காக சிறப்பாகச் செயலாற்றி சாதனை புரிந்த மூன்று மாவட்டங்களுக்கு மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நிகழாண்டில் (2022) மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள், கோவை, தஞ்சாவூா், கரூா் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டது.

இந்த விருதுகளை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் இருந்து சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சோ்ந்த ஆட்சியா்களான ஜி.எஸ்.சமீரன், தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், த.பிரபுசங்கா் ஆகியோா் பெற்றுக் கொண்டனா். இந்த விருதானது வெண்கலப் பதக்கமும், பாராட்டுப் பத்திரமும் கொண்டதாகும்.

இந்த நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதா ஜீவன், துறையின் கூடுதல் தலைமைச் செயலாளா் ஷம்பு கல்லோலிகா், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட இயக்குநா் வே.அமுதவல்லி, சமூக நல இயக்குநா் த.ரத்னா, சமூக பாதுகாப்பு இயக்குநா் ச.வளா்மதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.