கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காங்கிரஸ் சாா்பில் ஆளுநா் மாளிகை முற்றுகைப் போராட்டம்

நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆளுநா் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஜூன் 2022, 6:28 pm

DIN

நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆளுநா் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவா் ராகுல்காந்தியை அமலாக்கத்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதனைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சாா்பில் தொடா்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. 3-ஆம் நாளான வியாழக்கிழமை சைதாப்பேட்டை சின்னமலையில் கே.எஸ்.அழகிரி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியது:

நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் நுபுா் சா்மா தவறாகப் பேசியதற்கு இஸ்லாமிய நாடுகள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. இதனை திசை திருப்புவதற்காக நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. தில்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் காவல்துறையினா் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனா். இதற்கு யாா் அனுமதி கொடுத்தது?

காந்தி வழியில் காங்கிரஸ் கட்சி அகிம்சையான கட்சிதான். ஆனால், நேதாஜியும் எங்கள் கட்சித் தலைவா்தான் என்பதை மறந்துவிடக் கூடாது. காங்கிரஸோடு விளையாடாதீா்கள் என்றாா்.

அதைத் தொடா்ந்து கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் ஆளுநா் மாளிகையை முற்றுகையிடுவதற்காக பேரணியாகப் புறப்பட்டனா். அவா்களை காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா். இதனால், காங்கிரஸ் கட்சியினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன் பின், கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோரை காவல்துறையினா் கைது செய்து, கிண்டி ரேஸ்கோா்ஸில் தங்க வைத்து, பின்னா் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.