அக்னிபத் திட்டத்தை மாநில ஆளுநர் ஆதரிப்பது ஏற்புடையதல்ல: ப.சிதம்பரம்

அக்னிபத் திட்டத்தை மாநில ஆளுநர் ஆதரிப்பது ஏற்புடையதல்ல என்று முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரம் (கோப்புப்படம்)
ப.சிதம்பரம் (கோப்புப்படம்)
Updated on
1 min read

அக்னிபத் திட்டத்தை மாநில ஆளுநர் ஆதரிப்பது ஏற்புடையதல்ல என்று முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 'அக்னிபாத்' திட்டம் ஓர் அரசியல் முடிவு. இன்று சர்சைக்குரிய அரசியல் பிரச்னையாக உருவாகிவிட்டது. இதில் அரசுக்கு ஆதரவாக மாநில ஆளுனர் கருத்துத் தெரிவிப்பது ஏற்புடையதல்ல. 
மேலும், உள்நாட்டு சக்திகளும் வெளிநாட்டு சக்திகளும் இளைஞர்களுக்குத் தவறான வழியைக் காட்டுகிறார்கள் என்று சொல்வது அறவே ஏற்புடையதல்ல.

இந்தப் பிரச்னைக்கு அமைதியான போராட்டம் மூலமாகவும் விரிவான விவாதம் மூலமாகவும் தான் தீர்வு காணவேண்டும்.
இந்த விவாதத்தில் ஒரு மாநில ஆளுனர் பங்கேற்பதற்கு இடம் இல்லை. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com