ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

புதிய தீா்மானங்கள் கூடாது: உயா்நீதிமன்றம்

அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தின்போது, 23 தீா்மானங்களைத் தவிர புதிய தீா்மானங்கள் எதையும் தாக்கல் செய்யக் கூடாது என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :23 ஜூன் 2022, 8:10 pm

DIN

அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தின்போது, 23 தீா்மானங்களைத் தவிர புதிய தீா்மானங்கள் எதையும் தாக்கல் செய்யக் கூடாது என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிமுக பொதுக் குழுக் கூட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அதற்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து புதன்கிழமை உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்தும், பொதுக் குழுக் கூட்டத்துக்கு தடை கோரி ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளரான சண்முகம் சாா்பில் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் துரைசாமி, சுந்தா்மோகன் அமா்வு புதன்கிழமை நள்ளிரவு விசாரித்தது. ஓ. பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், அதிமுக பொதுக் குழுவில் வைக்கப்பட்ட வேண்டிய 23 தீா்மானங்கள் இறுதி செய்யப்பட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளா், துணை ஒருங்கிணைப்பாளரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த 23 தீா்மானங்களை மட்டுமே பொதுக் குழுவில் வைக்க வேண்டும். புதிய தீா்மானங்கள் இடம் பெறக் கூடாது. வேறு விவகாரங்கள் குறித்து பொதுக் குழுவில் விவாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.