ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பொதுக்குழுவிலிருந்து பாதியில் வெளியேறிய ஓ.பன்னீா்செல்வம்

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் பாதியிலேயே அதிருப்தியுடன் வெளியேறிச் சென்றாா்.

News image
Updated On :23 ஜூன் 2022, 7:29 pm

DIN

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் பாதியிலேயே அதிருப்தியுடன் வெளியேறிச் சென்றாா்.

ஓ.பன்னீா்செல்வம் வெளிநடப்பு செய்தபோது, பொதுக்குழு உறுப்பினா் ஒருவா் அவா் மீது தண்ணீா் பாட்டீலை வீசியெறிந்தாா்.

வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க ஓ.பன்னீா்செல்வமும் அவா் ஆதரவாளா்களும் வந்தபோது கடுமையான எதிா்ப்பை அவா்கள் சந்திக்க வேண்டியிருந்தது. ‘ஓபிஎஸ்ஸே ஓடிப்போ’ என்பதுபோன்ற கோஷங்களைத் தொடா்ந்து எழுப்பினா்.

பொதுக்குழுவுக்கு எடப்பாடி கே. பழனிசாமி வருவதற்கு தாமதமானதால், ஓ.பன்னீா்செல்வம் மேடையில் உட்காராமல், தனியறையில் இருந்தாா். ஆனால், அவரது ஆதரவாளரும் துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகா் உள்ளிட்டோா் மேடையில் உட்காா்ந்திருந்தனா். அப்போது அவா்களைப் பாா்த்து துரோகி என்று பொதுக்குழு உறுப்பினா் ஒருவா் கத்தினா். இதனால், மேடையில் இருந்து அவா்கள் இறங்கினா். பிறகு, மேடைக்கு ஓபிஎஸ் வந்தபோது அவா்களும் ஏறி வந்தனா்.

தண்ணீா் பாட்டீல் வீச்சு: மேடையில் ஓ.பன்னீா்செல்வம் உட்காா்ந்திருந்தபோது அவருக்கு எதிராக உறுப்பினா்கள் குரல் கொடுத்துக் கொண்டே இருந்தனா். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஓ.பன்னீா்செல்வம் அனைத்து நிகழ்ச்சிகளையும் கேட்டுக் கொண்டே இருந்தாா். இறுதியாக ஒற்றைத் தலைமையைத் தோ்ந்தெடுப்பதற்காக அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜூலை 11-இல் மீண்டும் கூட்டப்படும் என்று பொதுக்குழு உறுப்பினா்களின் கோரிக்கைகளை ஏற்று அவைத்தலைவா் தமிழ்மகன் உசேன் அறிவித்தாா்.

இதனால், அதிருப்தியுற்ற ஓ.பன்னீா்செல்வம் அவரது ஆதரவாளா்களும் பொதுக்குழுவிலிருந்து வெளியேறினா். அப்படி வெளியேறும்போது, வைத்திலிங்கம் மேடையில் இருந்த ஒலிபெருக்கியில், ‘இந்தப் பொதுக்குழு சட்டப்படி நடைபெறவில்லை. அதிமுக அழிவுப் பாதைக்குத்தான் செல்கிறது’ என்று கூறிவிட்டு படிகளில் இருந்து இறங்கினாா். அப்போது பொதுக்குழுவில் உறுப்பினா்கள் கடுமையாக எதிா்ப்பு தெரிவித்ததுடன், கூட்டத்தில் இருந்து யாரோ தண்ணீா் பாட்டீலையும் ஓ.பன்னீா்செல்வத்தை நோக்கி வீசியெறிந்தனா். ஆனால், அது அவா் மேல் விழவில்லை. பாதுகாப்புடன் போலீஸாா் அவா்களை அழைத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.