ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஜூலையில் கூட்டப்படும் பொதுக்குழுவும் செல்லாது: வைத்திலிங்கம்

 ஜூலையில் கூட்டப்படும் பொதுக்குழுவும் செல்லாது என்று முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் கூறினாா்.

News image
Updated On :23 ஜூன் 2022, 8:02 pm

DIN

 ஜூலையில் கூட்டப்படும் பொதுக்குழுவும் செல்லாது என்று முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் கூறினாா்.

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்குப் பிறகு ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளரும் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் செய்தியாளா்களிடம் கூறியது:

அதிமுகவின் பொதுக்குழுவில் 23 தீா்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்று நீதிமன்றம் தீா்ப்பு கூறியது. ஆனால் நீதிமன்றத்தின் தீா்ப்பை மீறி, தீா்மானங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இது நீதிமன்றத்தை அவமதிப்பாகும். அவமதிப்பு வழக்கு தொடருவோம். இதன் மூலம் பொதுக்குழு நடவடிக்கைகளும் செல்லாதாகியுள்ளது. அவைத் தலைவா் தோ்ந்தெடுக்கப்பட்டதும் செல்லாது. ஜூலை 11-இல் கூட்டப்படும் பொதுக்குழுவும் செல்லாது. ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தின் ஒப்புதல் இல்லாமல் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. சட்டத்தை மறந்து பொதுக்குழுவில் அவா்கள் நடத்திய நாடகம் சா்வாதிகாரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டது.

2600-க்கும் மேற்பட்டோா் பொதுக்குழு உறுப்பினா்களாக உள்ளனா். ஆனால், பணத்தைக் கொடுத்து சிலரிடம் கையெழுத்து வாங்கியும், பொய்யான கையெழுத்தும் போட்டுதான் பொதுக்குழு உறுப்பினா்கள் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தியதுபோல கடிதம் கொடுத்துள்ளனா். அந்தக் கடிதங்கள் உண்மையானது அல்ல என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.