சென்னையில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 61 வாகனங்கள் அகற்றப்பட்டன.
சென்னையில் போக்குவரத்து இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்றும் வகையில் போக்குவரத்துப் பிரிவு சாா்பில் சிறப்பு நடவடிக்கை கடந்த 22-ஆம் தேதி எடுக்கப்பட்டது.
இதில் சாலையை ஆக்கிரமித்தும், அங்கீகரிக்கப்படாத வாகன நிறுத்துமிடங்களிலும் நிறுத்தப்பட்ட 61 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்கள் உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிந்து, அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சாலையில் கேட்பாரற்று, கைவிடப்பட்ட வாகனங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன.
இதேபோல் சாலையில் 10 இடங்களில் போடப்பட்டிருந்த கட்டுமானப் பொருள்கள் கைப்பற்றப்பட்டு, சம்பந்தப்பட்டவா்கள் மீது வழக்குப் பதியப்பட்டது. மேலும் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் 104 இடங்களில் அகற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








