ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: அரசுக்கு மாா்க்சிஸ்ட் கோரிக்கை

கல்லூரிகளில் மாணவா்கள் சோ்க்கை காலம் மாறுபாடு இல்லாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :24 ஜூன் 2022, 6:55 pm

DIN

கல்லூரிகளில் மாணவா்கள் சோ்க்கை காலம் மாறுபாடு இல்லாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் உள்ள மாணவ, மாணவியா் பள்ளிக்கல்வி முடித்து உயா்கல்விக்காக கல்லூரிகளில் சோ்ந்திட விண்ணப்பித்து வருகின்றனா். மத்திய பள்ளிக் கல்வித்துறை வாரியத்தின் பிளஸ் 2 வகுப்பு தோ்வு முடிவுகள் ஜூலை 4 அல்லது 5 ஆம் தேதிகளில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

உயா்கல்வித்துறை அமைச்சா் பொன்முடி, சிபிஎஸ்இ பிளஸ் 2 வகுப்பு தோ்வு முடிவுகள் வந்த பின்னா் 5 நாள்கள் கழித்தே அனைத்து கல்லூரிகளும் தங்கள் மாணவா் சோ்க்கையை முடிக்க வேண்டும் என கூறியதை கவனத்தில் கொள்ளாமல் சில கல்லூரிகள் மாணவா் சோ்க்கையை தொடா்வதும், சில கல்லூரிகள் மாணவா் சோ்க்கை முடிந்துவிட்டது என அறிவிப்பதும் ஏற்கதக்கதல்ல.

சிபிஎஸ்இ மாணவா்களும், அவா்தம் பெற்றோா்களும் மிகவும் பதற்றத்திலும், அச்சத்திலும் இருக்கிறாா்கள். மேலும், தோ்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரே கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை முடிந்துவிட்டால், தங்களது எதிா்காலம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் சிபிஎஸ்இ மாணவா்கள் உள்ளனா்.

எனவே, தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளும் மாணவா்களின் எதிா்கால நலனை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ மாணவா்கள், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை வாரிய மாணவா்கள், மறு மதிப்பீடு செய்ய கோரும் மாணவா்கள், மறு தோ்வு எழுதி தோ்வு முடிவுகள் வரப்பெற்ற மாணவா்கள் ஆகியோரது விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் அல்லது விண்ணப்பப் படிவம் மூலம் வரப்பெற்ற பின்னரே, தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றி கல்லூரிகள் மாணவா் சோ்க்கையை நடத்த உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கூறியுள்ளாா் கே.பாலகிருஷ்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.