அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மதுபோதை! குடியிருப்புப் பகுதியில் கார் கவிழ்ந்து விபத்து

மது போதையில் சாலையில் தறிகெட்டு ஓடிய கார் குடியிருப்புப் பகுதிக்குள் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

News image
மதுபோதை! அதிவேகமாக சென்று குடியிருப்புப் பகுதியில் கவிழ்ந்த கார்
Updated On :26 ஜூன் 2022, 9:26 am

DIN

மது போதையில் சாலையில் தறிகெட்டு ஓடிய கார் குடியிருப்புப் பகுதிக்குள் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மதுரை மாடக்குளம் பகுதியில் உள்ள அரசு மாணவர் விடுதி அருகே பல்வேறு குடியிருப்புகளும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளன.

மாடக்குளம் பகுதியில் இருந்து பழங்காநத்தம் செல்லும் இந்த பிரதான சாலையில், சிவப்பு நிற கார் ஒன்று அதிவேகமாக சாலையில் சென்றுள்ளது. 

இந்நிலையில், அரசு மாணவர் விடுதி அருகே வளைவில் வேகமாக காரை ஒட்டியதால், நிலைதடுமாறி காலனி தரிசு என்று சொல்லக்கூடிய பகுதியில் தலைகீழாக கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் இல்லை.

மேலும் மது போதையில் இருந்த சம்மட்டிபுரம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுனர் சிறிய காயத்துடன் தப்பிய நிலையில், காரில் வந்த மற்றொரு நபர் நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்க தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓட்டுனரின் நண்பர்கள் விபத்து நடந்த இடத்தில் இருந்த மக்களிடம் சமாதானம் கூறி  காரை வேகமாக அங்கிருந்து அப்புறப்படுத்தி காவலர்கள் வருவதற்குள் தப்பிச் சென்றனர்.

மக்கள் நடமாட்டம் எப்போதும் இருக்கக்கூடிய அந்த பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அப்பகுதி மக்கள்,  மதுபோதையில் கொலை, கொள்ளை சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருவதாக தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.