முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை கைதியான நளினி பரோலில் வெளியே உள்ள நிலையில். அவருக்கு 6 ஆவது முறையாக மேலும் ஒரு மாத காலம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர்களில் ஒருவரான நளினி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூா் பெண்கள் தனிச்சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறாா். அவரது கணவர் ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் தங்களை விடுவிக்குமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், அவரது தாயாா் பத்மாவதி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், அவரை கவனித்துக்கொள்ள தனக்கு பரோல் வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தாா்.
இதையும் படிக்க | கல்வி மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்: ப.சிதம்பரம்
அதனை ஏற்று நளினிக்கு கடந்த டிசம்பா் மாதம் 27-ஆம் தேதி முதல் ஒரு மாத காலம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.
பரோலில் வெளியே வந்த நளினி காட்பாடி அடுத்த பிரம்மபுரத்திலுள்ள உறவினா் வீட்டில் தங்கியிருந்து அவரது தாயாரை கவனித்து வருகிறாா்.
அதன்பின் அவரது பரோல் தொடா்ந்து 5 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் அவா் திங்கள்கிழமை சிறைக்கு திரும்ப வேண்டியிருந்தது.
இந்நிலையில், தனது உடல்நிலையைக் காரணம் காட்டி அவரது தாயாா் பத்மா நளினிக்கு மேலும் பரோல் நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அளித்திருந்தாா்.
இதையும் படிக்க | தொண்டர்கள் என் பக்கம்; சதிவலை விரைவில் அவிழும்: ஓபிஎஸ்
அவரது கோரிக்கையை ஏற்று தொடா்ந்து நளினிக்கு 6-ஆவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீடித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஜூலை 26-ஆம் தேதி வரை 30 நாள்களுக்கு பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளாக வேலூா் சிறைத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரவு 10 மணிவரை 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
விஷால் இயக்கி நடிக்கும் மகுடம் படத்தின் முதல் பாடல்!

2-வது டெஸ்ட்: மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள்; 291 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!

எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடிக்க உத்வேகம் அளித்த சத்யராஜ்... விஜய் நேர்காணல் -4!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



