வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் சட்டரீதியாக செல்லும்: பொன்னையன்

அதிமுக தலைமையகத்தில் இன்று திங்கள்கிழமை நடைபெற்ற தலைமை நிர்வாகிகள் கூட்டம் சட்டரீதியாக செல்லும் என்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்தார். 

News image
Updated On :27 ஜூன் 2022, 12:31 pm IST


அதிமுக தலைமையகத்தில் இன்று திங்கள்கிழமை நடைபெற்ற தலைமை நிர்வாகிகள் கூட்டம் சட்டரீதியாக செல்லும் என்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்தார். 

ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக அதிமுக தலைமை அலுவலகத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்  எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்று முடிந்தது. 

அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டத்துக்கு பின்னர் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் பொன்னையன் செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது, அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுவான கட்சி நடவடிக்கைகள் குறித்து விவாதித்தோம். இன்று  நடைபெற்ற கூட்டம் சட்டரீதியாக நடைபெற்ற கூட்டம்.  கூட்டத்தை கூட்ட தலைமை நிலைய செயலாளருக்கு அதிகாரம் உள்ளது. 

இன்று நடைபெற்ற கூட்டம் சட்ட ரீதியாக செல்லும் என்று பொன்னையன் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.