பேரறிவாளனுக்கு பெண் பார்த்து வருகிறோம்: தாயார் அற்புதம்மாள்

பேரறிவாளனுக்கு பெண் பார்த்து வருவதாக அவரது தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். 
பேரறிவாளனுக்கு பெண் பார்த்து வருகிறோம்: தாயார் அற்புதம்மாள்
Published on
Updated on
1 min read

பேரறிவாளனுக்கு பெண் பார்த்து வருவதாக அவரது தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். 

சென்னை புழல் சிறையில் ராபர்ட் பயாஸை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், பேரறிவாளனுக்கு பெண் பார்க்க தொடங்கி உள்ளோம். விரைவில் அறிவிப்பு வரும். ராஜீவ் கொலை வழக்கில் நிச்சயம் மற்றவர்களுக்கும் விடுதலை கிடைக்கும். 2 மாதத்தில் அரசு கவனிக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், நளினி, சாந்தன் ஆகியோா் வேலூா் சிறையிலும், ராபா்ட் பயாஸ், ஜெயக்குமாா் ஆகியோா் புழல் சிறையிலும், ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த வழக்கில் 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த ஏ.ஜி.பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவரது மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com